Skip to main content

மோட்சம் தாராயோ

வாழ்வில் வசந்தங்கள் தந்திட,
என்னில் பாதியை ஏற்றிட ,
கை கோர்த்து இலக்கின்றி நடந்திட,
மங்கும் மாலைகளை சேர்ந்து இரசித்திட,
மடியினில் சாய்ந்து துயில் கொண்டிட,
காதல் களித்து கொண்டாடிட,
தோள் சாய்த்து துயர் நீக்கிட ,
அரவணைத்து அமைதி தந்திட ,
நம் கனவுகளை இணைந்து நனவாக்கிட ,
மெல்லிய சுரத்தினில் காதல் மொழி பேசிட ,
திகட்டாமல் தீராமல் காதல் செய்திட,
உன் உயர்வு கண்டு நான் பூரித்து மகிழ்ந்திட,
என்னை அழகாய் கொண்டு ரசித்து சிலாகித்திட,
பரிசு பரிமாற்றங்கள் நடத்தி இரசித்திட,
பேரன்போடு பெரு வாழ்வு வாழ்ந்திட ,
பிரிவுகள் வாட்டி வதைத்திட,
கண் பார்வையிலே தீராக் கதைகள் பேசிட,
கள்ளப் பார்வைகளில் உறைந்து மீண்டிட,
இயற்கையை ரசித்து மெய் மறந்திட,
புத்தகங்களில் புதைந்து தொலைந்திட,
 பேரின்ப மழையினில் மழலையாய் ஆட்டம் போட்டு திளைத்திட,
சில நிமிடம் நீடிக்கா செல்லச் சண்டைகள் போட்டிட,
சுதந்திரம், சுய மரியாதையோடு முழு வாழுவு வாழ்ந்திட ,
கால் கொலுசின் இசை கோர்வைகளில் கரைந்திட ,
உன் பாதம் பிடித்து பரிகாரம் செய்திட,
வெட்கம் கூடிய நின் பேரழகு முகத்தினை ஆராதித்திட ,.         
இதழோரப் புன்னகைகள் உள்ளத்தை உடைத்து எறிந்திட,
கற்றை கூந்தல் காட்டில் வாசம் செய்திட,
தமிழினும் இனிய கவித்துமான இல்லறம் செய்திட ,
வள்ளுவனை விடவும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்திட ,
பெருங்கவிகள் செய்திரா கவிதைகள் செய்திட ,
ஆற்றங்கரையில் தென்றல் காற்றினில் கரம் கோர்த்து கதைகள் பேசி காலம் தொலைத்திட ,
இருவருக்கே ஆன பிரத்யேக உலகம் செய்திட ,
தூய பெரும் அன்பினால் வாழ்வை பூரணமாக்கிட,
ஓர் உயிராய் இணைந்து வாழ்வெனும் பெரும் பயணம் செய்திட,
விரைந்து வந்திடு என்னவளே..
வரங்கள் தந்திடு என்னவளே..
மீட்பைத் தந்திடு என்னவளே ..
எவ்வாறு இருப்பாய், என்ன பெயரில் இருக்கியாய் என்னவளே...
தாளாத ஏக்கங்களை தீயிலிட்டு விரைந்து மோட்சம் தாராயோ என் சகியே !!!

Comments

  1. Super Aravind. Commit aagita pola😉

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருக்கும் போது எப்புடி சீக்கிரம் நடக்கும் நண்பா

      Delete
  2. பேரன்போடு பெருவாழ்வு வாழ்ந்திட...

    பேரழகு மன்னா வரிகள்..

    ReplyDelete
  3. Sema na😍 Eagerly waiting for my anni❤️

    ReplyDelete
  4. மிக அருமையான கற்பனை நயம் நிறைந்த வரிகள் அரவிந்த்... நல்ல முயற்சி... தொடர்ந்து பதிவிடவும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...