Skip to main content

கவிதையில் அடங்கா வரிகள்


பிரபஞ்சத்தின் பேரழகியும் தோற்று போவாள்....      
மல்லிகை சூடி,திலகமிட்டு தாவணி கட்டிய  என் தன்மான தமிழ்ப்பெண்ணிடம்....

நேற்றிரவு கனவில்,                 
 நாம் நிலவொளியில் நின்றிருந்தோம்.... குழம்பிப்போயிருந்தேன் நான் எது நிலவென்று. #பளிங்கு முகம் 😍😍😍

பிறவியிலே அழகி அவள். அவளுக்கு மட்டும் அம்மா அன்னத்துடன் அழகையும் ஊட்டினாள் போலும் என் பிரபஞ்சம் யாவும் நிறைந்துவிட்டாள் 

தென்றல் தேகம் வருட நிலவொளியில் நாம் நின்றோம் குழம்பி போயிருந்தேன் எது நிலவென்று 

 கள்வர் கூட்டத்தின் கண்களே களவு செய்கின்றன 

தென்றல் தேகம் வருட தரணியின் கரையில் நின் கரம் கோர்த்து நிந்தன் கதைகள் கேட்டு கரையுமா மங்கும் மாலை யாவும் 

கரைந்து போகும் காட்சிகளில் , கரைய விரும்பா காட்சி ஒன்று. பௌர்ணமி நிலவொளியில் , காதல் களஞ்சியத்தின் முன் , யமுனையில் பிறந்த ஈரக்காற்றில் கரைந்து கொண்டிருக்கும் நான் # தாஜ் 

மலைக்கோவில் வாசல்,
யாவற்றையும் இருக அனைத்திருக்கும் இருள்,
படர்ந்திருக்கும் மார்கழிப் பனி,
இருள் கிழிக்கும் அகல்,
தேகம் தீண்டும் தென்றல்
காற்றும் கானகமும் காதலிக்கும் இசை,
சிலிர்ப்பு,
பேரன்புத் தையல்,
பெருங்கனவு 😍😍

ஊர் கண் படுமென கடவுள் வைத்த கண்மையோ உன் கன்னத்தின் மச்சம் 

உன் அருகிலே நானிருந்தால் உள்ளம் குழதையிடம் அகப்பட்ட காகிதமாய் கசங்கிப் போகிறதடி

மலை முகட்டின் வடிவொத்த நின் புருவங்கள் வருடும் வரம் வருமா வாழ்வில்

அகல் வெளிச்சத்தில் நின் கரிய கண்களுக்கு
கோடி மின்னலின் சக்தி வந்ததெப்படி கண்மணி 

இருளுக்கு முந்திய மயங்கும் மாலையின் வானை அவன் கண்கள் ருசித்துக்கொண்டிருந்தன. இரு மலைகளை பிரித்து சென்ற அந்த ரயிலின் உட்புகுந்த தென்றல் , களவாடி வந்த வாசம் அவனுக்கு ஓர் இருப்பை உணர்த்திச் சென்றது.

ஈவு இறக்கமற்றவள் நான் யாசிக்கும் பார்வையை கூட ரட்சிக்க மறுக்கிறாள் 


தேர்ந்த ஓவியன் வரைய தொடங்கிய ஒவியத்தின் கரிய கோடுகள் அவள் கன்னம் சரியும் கற்றை கூந்தல்

Comments

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...