Skip to main content

சமூக நீதி


சமூக நீதி 


என்னை பொறுத்தவரையில் நீட் போன்ற தகுதி தேர்வுகள் அவசியமே . அனால் அதற்கு முன் அம்பானியின் குழந்தைக்கும் என் கிராமத்து குழந்தைக்கும் ஒரே கல்வி தரத்தை சாத்தியப்படுத்த வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளி வருவதே அபூர்வம் . மேலும் அவர்கள் ஆசிரிய பணியோடு பல பணிகளை செய்கிறார்கள் , அதிக சிரத்தையோடு . மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் மிகவும் குறைந்து விட்டது. ஆகையால் இத்தகைய ஆசிரியர்களை முதலில் களை எடுக்க வேண்டும் . மிக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மேற்ச்சொன்ன கனவான்கள் ஏளனமாக பார்க்கும் வினோதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனாலே அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் நிச்சயம் அரசு பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என சட்டம் போட வேண்டும். அப்போது தான் மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளை போல் அன்பு செலுத்துவார்கள்

இவ்வாறு அந்த ஆசிரியர் மட்டும் அன்பு செய்திருந்தால் , பாளையங்கோட்டையில் என் சகோதரி உயிர் நீத்திருக்க மாட்டாள். அனிதாவின் மரணத்துக்கு நிகரானது இவளின் மரணம் . ஆகவே இந்த பிரச்னையோடு இதையும் நிச்சயம் பேச வேண்டும் .

தகுதி தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு  அணைத்து மாணவர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டும் . எனெனில் கிராமப்புற மாணவனுக்கு IIT இருப்பதே தெரிவதில்லை . பின் எவ்வாறு அதன் தகுதித்தேர்வு தெரியும் .

எனக்கு புரியாத விசயம் , தகுதித் தேர்விற்கு தயாராக பயிற்சி மையங்கள் செல்வது தான் . தகுதித் தேர்வுகள் நாம் பள்ளியில் பயின்றதால் பெற்ற அறிவை சோதிக்க மட்டுமே , பயிற்சி மையங்களின் உழைப்பை சோதிக்க அல்ல என்பதை அணைவரும் உணர வேண்டும் . அப்போது தான் உண்மையில் தகுதி வாய்ந்த மருத்தவரை உருவாக்க முடியும்

எல்லாவற்றையும் விட முதலில் அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுங்கள் பிறகு யோசிப்போம் தகுதி தேர்வைப்பற்றி 


- தமிழ்மித்ரன் அர்விந்த் 

Comments

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...