சமூக நீதி
என்னை பொறுத்தவரையில் நீட் போன்ற தகுதி தேர்வுகள் அவசியமே . அனால் அதற்கு முன் அம்பானியின் குழந்தைக்கும் என் கிராமத்து குழந்தைக்கும் ஒரே கல்வி தரத்தை சாத்தியப்படுத்த வேண்டும் .
அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளி வருவதே அபூர்வம் . மேலும் அவர்கள் ஆசிரிய பணியோடு பல பணிகளை செய்கிறார்கள் , அதிக சிரத்தையோடு . மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் மிகவும் குறைந்து விட்டது. ஆகையால் இத்தகைய ஆசிரியர்களை முதலில் களை எடுக்க வேண்டும் . மிக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மேற்ச்சொன்ன கனவான்கள் ஏளனமாக பார்க்கும் வினோதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனாலே அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் நிச்சயம் அரசு பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என சட்டம் போட வேண்டும். அப்போது தான் மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளை போல் அன்பு செலுத்துவார்கள்.
இவ்வாறு அந்த ஆசிரியர் மட்டும் அன்பு செய்திருந்தால் , பாளையங்கோட்டையில் என் சகோதரி உயிர் நீத்திருக்க மாட்டாள். அனிதாவின் மரணத்துக்கு நிகரானது இவளின் மரணம் . ஆகவே இந்த பிரச்னையோடு இதையும் நிச்சயம் பேச வேண்டும் .
தகுதி தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு அணைத்து மாணவர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டும் . எனெனில் கிராமப்புற மாணவனுக்கு IIT இருப்பதே தெரிவதில்லை . பின் எவ்வாறு அதன் தகுதித்தேர்வு தெரியும் .
எனக்கு புரியாத விசயம் , தகுதித் தேர்விற்கு தயாராக பயிற்சி மையங்கள் செல்வது தான் . தகுதித் தேர்வுகள் நாம் பள்ளியில் பயின்றதால் பெற்ற அறிவை சோதிக்க மட்டுமே , பயிற்சி மையங்களின் உழைப்பை சோதிக்க அல்ல என்பதை அணைவரும் உணர வேண்டும் . அப்போது தான் உண்மையில் தகுதி வாய்ந்த மருத்தவரை உருவாக்க முடியும் .
எல்லாவற்றையும் விட முதலில் அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுங்கள் பிறகு யோசிப்போம் தகுதி தேர்வைப்பற்றி
- தமிழ்மித்ரன் அர்விந்த்
Comments
Post a Comment