Skip to main content
தமிழறிஞர் கலைஞர் வாழ்க !!!!

தலைப்பு, கலைஞர் இரண்டும் எனக்கு விருப்பமற்றவை தான் , ஆயினும் இந்த பதிவு நான் மிக நேசிக்கும் ஒன்று . இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன்.

 சென்னை வந்து ஒரு வருடமாய் இங்கு வரத்தவறியது குறித்து மனதில் ஒரு உறுத்தல் இருந்ததது. நூலக வாயில் நுழைந்ததும் கட்டிடத்தின் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்று விட்டேன். அப்போது ஓர் கல்வெட்டு கண்ணில் பட்டது , அதில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டதை கண்டதும் தான் இந்த பிரம்மாண்டம் கலைஞரின் படைப்பு என்பது நினைவுக்கு வந்தது. கலைஞரின் வாரிசு அரசியல் , அவரின் ஆட்சியில் நடந்த சுரண்டல், ஊழல் என பலவற்றால் அவரையும் ,கழகத்தையும் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆயினும்  அனைத்தையும் தாண்டி அண்ணா நூலகத்தினால் என் மனதில் அவர் இன்று உயர்ந்து விட்டார் . 

ஏனெனில் புத்தக வாசிப்பு மிகக்குறைந்த அளவில் உள்ள ஒரு தொண்மைச் சமூகம் நமது தமிழ்ச் சமூகம். நமது நிலையை நன்கு உணர்ந்து புத்தக வாசிப்பை பெருக்க, கலைஞரின் இந்த நூலகம் ஓர் ஆகச்சிறந்த முயற்சி ஆகும். மேலும் புத்தகக் காதலர்கள் , ஆராய்ச்சியாளர்கள்,  மாணவர்கள் போட்டி தேர்வு எழுதுபவர்கள் , அகப் பார்வையுடையோர் என அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி இந்த நூலகம் ஒரு வரம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . இதை நான் கண்டுணர்ந்தே சொல்கிறேன். எட்டு மாடிகள் கொண்ட நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க .வைக்கிறது. அனால் சமீபத்திய தமிழ் நூல்கள் இன்னும் வந்து சேர வில்லை போலும். படைப்பாளிகள் தயவு கூர்ந்து தங்கள் படைப்புகள் அனுப்ப முயலுங்கள்

 சென்னையில் பிரமாண்டமாய் மால்களை மட்டுமே பார்த்த எனக்கு நூலகத்தின் பிரமாண்டம் மலைப்பைத்தந்தது . அது மட்டுமின்றி முற்றிலும் குளிரூட்டப்பட்ட தெளிவான உட்கட்டமைப்பு பாராட்டத்தக்கது. உண்மையான சிரத்துடன் நூலகத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. இதில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள் என்ற கணக்கை தள்ளி வைத்து விட்டு அதன் நோக்கத்திற்க்காக கலைஞரை நிச்சயம் கொண்டாடலாம். 

 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட காரணத்தால் பராமரிப்பு பணிகள் யாவும் இப்போது சரிவர செய்யப்படவில்லை . ஆட்சியை காப்பாற்ற போராடுபவர்கள் நூலகங்களில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பது மடத்தனம் . அரசியலை விடுவோம் ..

சென்னைவாசிகள் தயவு செய்து உங்கள் குழந்தைகளை மால்கள் , கோவில்களை விட  நூலகம் அழைத்து செல்லுங்கள். புத்தகம் நம் உலகை விரிவாக்கும் , அறிவை விசாலமாக்கும் , அன்பை மனதில் விதைக்கும் , சிந்திக்க தூண்டும். 

சிந்திக்க தெரிந்த சமூகம் நிச்சயம்  மேன்மை பெரும். 

நூலகங்களை பெருக்குவோம் ...
புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்..
 அறிவார்ந்த தமிழ் சமூகத்தை மீட்டெடுப்போம்...

ஒரு வரியில் சொல்வதானால் உலகத்தரத்தில் ஓர் நூலகம் நம் சென்னையில்........ 




Comments

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...