Skip to main content

Posts

Showing posts from June, 2017

மனிதமே மகத்தானது

மனிதமே மகத்தானது என்பது எனக்கு இலக்கியம் கற்றுத்தந்தது .   எதிர்பார்ப்பற்ற அன்பு செய்யும் மனிதர்களை காண நேரும் போதெல்லாம் மனம் பெரும் புத்துணர்ச்சி பெருகின்றது . முக்கூடல் பரணியில் குளித்துவிட்டு சூடாக டீ அருந்துவது வழக்கம் , இம்முறையும் அவ்வாறு சென்ற போது அவரை சந்தித்தேன் . பார்த்த உடன் நான் அடையாளம் கண்டுகொண்டேன்,  என் பள்ளி பருவங்களின் கோடை காலங்கள் எல்லாம் அவரின் பால் மற்றும் சேமியா ஐஸ்களுடனே கழிந்தன. இப்போது அவர் டீ மாஸ்டர் , முதுமை தந்த வேலை அது என நினைத்துக்கொண்டேன். என்னை பார்த்த உடன் வாஞ்சையுடன் என் கரம் பற்றிக்கொண்டார் என்னை நியாபகம் இருக்கான்னு கேட்டேன் என்னய்யா இப்புடி கேட்டுட்டன்னு என்றவர் கண்கள் ஈரமாகியிருந்தது. எனக்கும் பின் பேச்சு வரவில்லை. என் மீது அவர் கொண்ட தூய அன்பில் நான் திக்குமுக்காடிப்போனேன். அனால் அவ்வன்பை உணர்ந்ததால் என் மனம் பெறும் உவகை கொண்டது. அவரைப் போன்ற மனிதர்களாலே உலகம் மேலும் அழகாகிறது. அனைவரும் அன்பு செய்வோம், அழகாகட்டும் அகிலம் ❤️❤️❤️