Skip to main content

Posts

Showing posts from October, 2019

மாலை நடையின் அழகியல்கள்

இப்போது தினமும் நடை பயிற்சி செல்கிறேன் இன்று சென்னையில் உள்ள புனித தோமையர் குன்றிற்க்கு சென்றேன் இன்றைய நடை ஓர் வாழ்வனுபவமாக மாறிப்போனதின் விளைவு இந்தப் பதிவு கதிரவனும் வானும் நிகழ்த்தும் வர்ண  ஜாலம். வானெங்கும் பூத்துக்கிடக்கும் விண்மீன்கள். நிலமெங்கும் பூத்துக்கிடக்கும் மின்மீன்கள். தூரத்தில் நிகழும் வானவேடிக்கை. ஓர் மலை கிராமம் போல  ஆனந்த உணர்வு. தேகம் தீண்டும் தென்றல். நெடுந்தூரத்து குன்றுகள். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இயற்கையே