Skip to main content

Posts

Showing posts from April, 2019

தூயவளே

இயற்கை அன்னையின் மெய் நிகரானவளே... பல சென்மங்களின் பூர்வ பலனாய் என் வாழ்வில் வந்தவளே.. பெரும் காட்டுச்சுனை நீர் போலே.. சற்று முன் விரிந்த மொட்டைப் போலே.. என் தாய்த்தமிழ் போலே.. ஆருயிர் நண்பனின் அன்பைப் போலே.. கொட்டும் மலை அருவியின் நீர் போலே.. ஈன்றெடுத்த அன்னையின் பேரன்பு போலே.. உயிர் உருக்கும் குளிர்த் தென்றல் போலே.. ஆர்ப்பரிக்கும் ஆழி போலே.. மயக்கும் மாலை வெயில் போலே.. மழை தரும் கார் முகில் போலே.. உணவளிக்கும் அன்னை மண் போலே.. புல்லின் நுனியில் அமரும் காலைப் பனி போலே.. தாயின் மார்பில் சுரந்த பால் போலே.. உழைப்பில் பிறந்த வியர்வை போலே.. முதுமை பரிசளித்த சுருக்கங்கள் போலே.. மழலையின் பேரன்புப் புன்னகை போலே.. அதி தூய்மையின் மருவடிவானவளே... தூய்மையின் பல நாமங்களில் பிரீத்தி எனப் பெற்றவளே.. என் தங்கையானவளே.. நின் மனம் போலே பெரு வாழ்வு வாழ்வாய் தூயவளே...

ஆழிப்பெருங்காதல்

நிசப்த அலைவரிசையில் நின் மொழி கேட்டு காதல் கொண்டேனடி உன்பால்.. அகண்ட உன் பரப்பில் விழுந்து தொலையவே ஆவலடி கண்ணே.. உன் அக்கரை அழகின் அரூபம் காணவே ஆவலடி கண்ணே.. இரவில் உன் பேரழகை காணவே விண்மீன்கள் பிறந்தனவோடி பெண்ணே.. தண்ணொளியால் சிவக்கும் உன் பொன்னிற மேனி காணவே கதிரவனும் வருகிறானோடி கண்ணே.. உன் காதல் கலந்த மெல்லிய மூச்சுக் காற்றில் கரையவே ஆவலடி கண்ணே.. இப்பெரு வாழ்வு பிரிந்து உன்னில் கலந்திடவே ஆவலடி கண்ணே.. ஓய்ந்திடாமல் எனை தொட துடிக்கும் உன் அலைக்கரங்களை அள்ளி அணைத்திடவே ஆவலடி கண்ணே.. இயலா பேராவல்களால் மனம் பெரும் துன்புற, என்றென்றும் மரிக்காதடி ஆழிப்பெண்ணே என் பெருங்காதல்....