Skip to main content

Posts

Showing posts from 2016
மாமன் வீடு மாமன் வீடு... முற்றம்.... வாடைக்காற்று... மீன்குழம்பு வாசம்.... ராஜா இசை.... மழை தரும் வானிலை... குளிர்ந்த நீர்க்குளியல்.... எத்தணை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா....... 
புகைப்படக்காரனாக விழைந்ததின் விளைவு.............

கல்லூரிக்காலம்

உள்ளத்தில் கல்லூரி காலத்தின் நினைவுகள் ஆழிப் பேரலையாய் வெகுண்டு எழுந்து என்னை எழுத தூண்டின . அப்பேரலையின் விடா முயற்ச்சியின் வெற்றிதான் இந்த பதிவு . கவலை ,  போட்டி, பொறாமை ,  வஞ்சம்,  சூழ்ச்சி என தீமை யாவுமின்றி வாழ்வின் பரிசுத்தமான நாட்களாய் நகர்ந்தவை அவை .  வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கான நிர்பந்தத்தின் விளைவான இந்த நெருக்கடி நாட்களில் சற்று பின்னோக்கி பார்த்ததும் மனம் கட்டி எழுப்பும் கல்லூரியின் நினைவுகளை வார்த்தைகளில் வார்த்து எடுப்பது தனி அலாதிதான் .  கல்லூரி முடித்த யாவரும் திரும்பி பாருங்கள்  கல்லூரியின் நினைவுகள் ஏதும் திரும்பவில்லையெனில் நீங்கள் வாழ்வின் மதிப்பில்லா நாட்களை சரியாய் வாழ தவறிவிட்டீர்கள் . மிகப்பாவம் நீங்கள் .  சற்று உற்று நோக்கினால் அவை கவலை இல்லா நாட்கள் இல்லை ஆனால் கவலைகளை மறக்க வைத்த நாட்கள் மறக்க வைத்தது அந்த இடம்   காரணங்கள் பற்பல... கல்லூரியின் ஒரு நாள்  எந்த அவசரமும் இன்றி மிக நிதானமாக அமைதியாக தொடங்கும்....
பாதுகாக்க பண்பாடு  சங்கம் வைத்து தமிழ் வளர்த்து..  யானை கட்டி போர் அடித்து .. ஆழிப் பேரலையில் அணை கட்டி.. இமயம் வென்று கொடிநாட்டி.. தறி கொண்டு துணி நெய்து.. வானியலை வரையறுத்து.. பொறியியல் புகுத்தி கோபுரம் கட்டி ... முறம் கொண்டு புலி விரட்டி.. எண்ணிலடங்கா இலக்கியம் செய்து.. உழுதுண்டு உள மகிழ்ந்து.... கவிதையில் அடங்கா காரியங்கள் பல செய்து.... போற்றி காப்பாற்றிய நம் பண்பாட்டை-வேற்று தேசத்தவனின்... வியாபார புத்தியில் நாசம்  செய்தோம்.... அவன் நாட்டு அடிமட்ட உணவையும் அழ‌காய் விற்றான் ... அந்தஸ்து என நாமும் உண்டோம்... பாரம்பரிய உணவுகளை பரிகாசம் செய்தோம்... வெப்ப தேசத்து உடை மறந்து வெள்ளைக்காரன் உடையணிந்தோம்... நாகரீக மோகத்தில் அறிவிழந்தோம்.. வரலாற்றை அழித்தான் அனாதைகளானோம்... மரணத் தருவாயில் இன்று மானத் தமிழன் பண்பாடு..... இப்போது, ஆர்ப்பரிக்கிறோம்  அங்கலாய்க்கிறோம்.. போராடுகிறோம்  புரண்டெழுகிறோம்..  பாதுகாக்க நம் பண்பாட்டை நம் நாட்டில் ...
ஹைக்கூ வர்ண ஜாலங்களின் மேடை வானம் ... ஜாலக்காரன் சூரியன் ... ஆடியன்ஸ்க்கு தான் ஆளில்லை !!!!
கோட்டிக்காரன் மழைக்கு முந்தைய வாடைக்காற்று.... கரிய மேகக் கூட்டம்.... பக்கத்து ஊரின் மண் வாசம்... தூரத்து மரக்கிளை பறவையின் கானம்.... வேறென்ன வேணும் மனசு மகிழ.. காகிதத்துடன் கல்லிடம் மன்றாடுகிறான் கோட்டிக்காரன்.
முதல் பதிவு அம்மாவுக்காக. ஹைக்கூ என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா.