Skip to main content

Posts

சமூக நீதி

சமூக நீதி  என்னை பொறுத்தவரையில் நீட் போன்ற தகுதி தேர்வுகள் அவசியமே . அனால் அதற்கு முன் அம்பானியின் குழந்தைக்கும் என் கிராமத்து குழந்தைக்கும் ஒரே கல்வி தரத்தை சாத்தியப்படுத்த வேண்டும் .  அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளி வருவதே அபூர்வம் . மேலும் அவர்கள் ஆசிரிய பணியோடு பல பணிகளை செய்கிறார்கள் , அதிக சிரத்தையோடு . மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் மிகவும் குறைந்து விட்டது . ஆகையால் இத்தகைய ஆசிரியர்களை முதலில் களை எடுக்க வேண்டும் . மிக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மேற்ச்சொன்ன கனவான்கள் ஏளனமாக பார்க்கும் வினோதம் நடந்து கொண்டிருக்கிறது . இதனாலே அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் நிச்சயம் அரசு பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என சட்டம் போட வேண்டும் . அப்போது தான் மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளை போல் அன்பு செலுத்துவார்கள் .  இவ்வாறு அந்த ஆசிரியர் மட்டும் அன்பு செய்திருந்தால் , பாளையங்கோட்டையில் என் சகோதரி உயிர் நீத்திருக்க மாட்டாள் ...
தமிழறிஞர் கலைஞர் வாழ்க !!!! தலைப்பு, கலைஞர் இரண்டும் எனக்கு விருப்பமற்றவை தான் , ஆயினும் இந்த பதிவு நான் மிக நேசிக்கும் ஒன்று . இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன்.  சென்னை வந்து ஒரு வருடமாய் இங்கு வரத்தவறியது குறித்து மனதில் ஒரு உறுத்தல் இருந்ததது. நூலக வாயில் நுழைந்ததும் கட்டிடத்தின் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்று விட்டேன். அப்போது ஓர் கல்வெட்டு கண்ணில் பட்டது , அதில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டதை கண்டதும் தான் இந்த பிரம்மாண்டம் கலைஞரின் படைப்பு என்பது நினைவுக்கு வந்தது. கலைஞரின் வாரிசு அரசியல் , அவரின் ஆட்சியில் நடந்த சுரண்டல், ஊழல் என பலவற்றால் அவரையும் ,கழகத்தையும் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆயினும்  அனைத்தையும் தாண்டி அண்ணா நூலகத்தினால் என் மனதில் அவர் இன்று உயர்ந்து விட்டார் .  ஏனெனில் புத்தக வாசிப்பு மிகக்குறைந்த அளவில் உள்ள ஒரு தொண்மைச் சமூகம் நமது தமிழ்ச் சமூகம். நமது நிலையை நன்கு உணர்ந்து புத்தக வாசிப்பை பெருக்க, கலைஞரின் இந்த நூலகம் ஓர் ஆகச்சிறந்த முயற்சி ஆகும். மேலும் புத்தகக் காதலர்கள் , ஆராய்ச்சியா...

மனிதமே மகத்தானது

மனிதமே மகத்தானது என்பது எனக்கு இலக்கியம் கற்றுத்தந்தது .   எதிர்பார்ப்பற்ற அன்பு செய்யும் மனிதர்களை காண நேரும் போதெல்லாம் மனம் பெரும் புத்துணர்ச்சி பெருகின்றது . முக்கூடல் பரணியில் குளித்துவிட்டு சூடாக டீ அருந்துவது வழக்கம் , இம்முறையும் அவ்வாறு சென்ற போது அவரை சந்தித்தேன் . பார்த்த உடன் நான் அடையாளம் கண்டுகொண்டேன்,  என் பள்ளி பருவங்களின் கோடை காலங்கள் எல்லாம் அவரின் பால் மற்றும் சேமியா ஐஸ்களுடனே கழிந்தன. இப்போது அவர் டீ மாஸ்டர் , முதுமை தந்த வேலை அது என நினைத்துக்கொண்டேன். என்னை பார்த்த உடன் வாஞ்சையுடன் என் கரம் பற்றிக்கொண்டார் என்னை நியாபகம் இருக்கான்னு கேட்டேன் என்னய்யா இப்புடி கேட்டுட்டன்னு என்றவர் கண்கள் ஈரமாகியிருந்தது. எனக்கும் பின் பேச்சு வரவில்லை. என் மீது அவர் கொண்ட தூய அன்பில் நான் திக்குமுக்காடிப்போனேன். அனால் அவ்வன்பை உணர்ந்ததால் என் மனம் பெறும் உவகை கொண்டது. அவரைப் போன்ற மனிதர்களாலே உலகம் மேலும் அழகாகிறது. அனைவரும் அன்பு செய்வோம், அழகாகட்டும் அகிலம் ❤️❤️❤️

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...
கருவில் வந்த கடவுள்  பிரபஞ்சத்தின் பேரழகியே, உன் பேதமையில் போதை கொண்டேனடி பெண்ணே.... உன்  பொக்கை சிரிப்பில் புதைந்தேனடி பெண்ணே மீளவேண்டாமல்... உன் கேசத்தின் வாசம் தேகமெங்கும் தேங்குதடி பெண்ணே.... என் வார இறுதி எல்லாம் வரமாகிறதடி உன்னால்... உன்  வேல்விழிப் பார்வை என்  உடலை ஊடறுத்து செல்லுதடி பெண்ணே..  உன் பேரன்பினால் பிரளயம் நிகழ்த்துகிறாயடி என்னுள் .... மீசை இழந்தேனே உன்னால், முத்தம் கொடுக்கையில் முகம் சுழிக்கிறாய் என்று....  உன்னை கட்டி அணைக்கையில் ஆர்ட்டிக்கின் அருகில் நானடி ... அன்பை பொழிந்து அன்னை ஆகிறாயடி அநேக நேரங்களில்.... உன் அரை நொடி மருத்துவத்தில் காயங்கள் எல்லாம் கரைந்து ஓடுதடி.... அன்பினால் அகிலம் காணா யுத்தம் தொடுக்கின்றாயடி என்மேல்...  தலை சாய்ந்து நீ பார்க்கையில் குடை சாய்கிறதடி என்  உள்ளம்....  மொழியற்ற போதிலும் கதைகளுக்கு பஞ்சம் இல்லையடி கண்ணே...  என் நிகழ் காலத்தின் நிறங்கள்  மாற்றிவிட்டாயடி பெண்ணே.... வாழ்வின் சுவர்களிலெல்லாம் உன் வர்ண ஜாலங்கள் அரங்கேற்றம் நிகழுதடி ... காவி...
மறதி நம் தேசிய வியாதி மக்களை அறியாதவர் மக்களை ஆளப்போகிறார் - சிறந்த மக்களாட்சி. உணர்ச்சி பூர்வமாக பதிவுகள் போடுவதாலோ , கேலி செய்து படங்களை உருவாக்குத்துவதனாலோ இங்கு மாற்றம் நிகழ்ந்து விடாது. மாற்றத்துக்கான சாவி உங்கள் ஒற்றை விரலில் உள்ளது. நம் ஜனநாயகம் தந்திருக்கும் மாபெரும் ஆயுதம் அது. அதை சரியாக பயன்படுத்தி இனிவரும் காலங்களில் புதிய விதி செய்வோம். மறந்து விடாதே தமிழா..... அறிவு ஆயிரம் சொன்னாலும் மனம் சொல்கிறது இன்று கருப்பு தினம் தான் என்று......
மாமன் வீடு மாமன் வீடு... முற்றம்.... வாடைக்காற்று... மீன்குழம்பு வாசம்.... ராஜா இசை.... மழை தரும் வானிலை... குளிர்ந்த நீர்க்குளியல்.... எத்தணை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா.......